யூபிஎஸ்சியின் முதண்மை தேர்வான மெயின்ஸ் தேர்வு வெளியீடு தமிழகத்தில் இருந்து 810 பேர் தேர்வு செய்ய்யப்பட்டுள்ளனர். முதண்மை தேர்வு முடிவின் மூலம் தமிழகத்தில் இருந்து 810 பேர் இண்டர்வியூ தேர்வுக்கு அழைக்கப்படுவரகள்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 பதவிகளுக்கான தேர்வை இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு, மத்திய தேர்வு ஆணையமான யூபிஎஸ்சி நடத்துகின்றது. சிவில் சர்வீஸ் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதண்மை தேர்வு இறுதியாக நேரடி ஆளுமை திறனாய்வு என்ற மூன்று நிலைகளை இந்த தேர்வு நடத்தப்படும்.
கடந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்காக நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வில் 6 லட்சம் பேர் எழுதினார்கள். ஐஏஎஸ் தேர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதண்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மொத்தம் 13,365 பேர்.
முதண்மை தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை யூபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு நடத்தியது. மெயின்ஸ் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற கனவு கொண்டவர்கள் நேரடியாக அதிகாரப்பூர்வ இணையதளமான யூபிஎஸ்சியில் அறிந்து கொள்ளலாம்.
யூபிஎஸ்சி தேர்வானது நாட்டிலுள்ள பெரும்பாலான மாணவர்களின் கனவாகும். நாடெங்கும் யூபிஎஸ்சி தேர்வினை எழுத பல்வேறு வழிகாட்டுதல்களும் கோச்சிங் செண்டர்களும் நிறைந்து காணப்படுகின்றது.
போட்டி தேர்வர்கள் பலருடைய கனவில் சிலருடைய கனவு நிறைவு பெறாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தோற்றவர்களுக்கு தொடர்ந்து போராடுங்கள் உங்கள் தவறினை அறிந்து கொள்ளுங்கள் அடுத்த முறை செய்த தவறினை திரும்ப செய்யதீர்கள். உங்களுடைய வெற்றி தள்ளிப் போடப்பட்டுள்ளது தடை செய்யப்பவில்லை உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
சார்ந்த பதிவுகள்: