மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ நிர்வாகம் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 தேதி அன்று, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்து வருகிறது
கடந்த 2000ஆவது ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கான எண்ணிக்கை, இந்தாண்டு 34ல் இருந்து 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் 5 விருதுகள் தலைமையாசிரியர்களுக்கும் இதுபோக விளையாட்டு, நடத்துகலை ஆசிரியர்கள், சிறந்த பயிற்சியாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட பத்து பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இந்தாண்டு விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன.
எப்படி விண்ணப்பிப்பது: இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன் 30 நிமிடங்கள் ஓடும் வகையில் வகுப்பறையில் பாடம் நடத்தும் தங்களது வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, அதனை இணைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை: வயது, அனுபவம், கல்வித்தகுதி போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு விருது பெரும் ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 13, 2018.