திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக்காவலர், சுருக்கெழுத்தர் தட்டச்சர், மசால்ஜி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு உடனடியாக விண்ணப்பித்து பயனடையுடங்கள்.
நிர்வாகம் : திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
- அலுவலக உதவியாளர் - 23
- இரவுக்காவலர், மசால்சி - 07
- துப்புரவு பணியாளர் - 01
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்
- சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-II - 07
- கணினி ஆப்ரேட்டர் - 01
ஊதியம் : ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரையில்
கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என சம்மந்தப்பட்ட கல்விக்கு தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் மூலமாக
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627 002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://districts.ecourts.gov.in/sites/default/files/Employment%20notification%20for%20the%20post%20ofOffice%20Assistant%20Night%20watchman%20Masalchi%20Steno%20Typist%20Computer%20operator%20Sweeeper_0.pdf அல்லது https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/notification என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.