பெரம்பலூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம், பெரம்பலூர்
மேலாண்மை : தமிழ்நாடு அரவு
பணி : மேற்பார்வையாளர், உதவியாளர், எழுத்தர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 28
கல்வித் தகுதி :
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள், கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.10,050 முதல் ரூ.54,600 வரையில் மாத ஊதியம் வழங்கப்படும். பணிகளுக்கு ஏற்ப ஊதியம் மாறுபடும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://ngtdrb.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06-04-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ngtdrb.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.