மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எம்.எஸ்சி, எம்.ஏ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் (NIRT)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஆலோசகர்
மொத்த காலிப் பணியிடம் : 07
கல்வித் தகுதி : M.S.W (Master of Social Work), M.Sc Psychology, M.A Sociology துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்,
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.32,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.nirt.res.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட மின் அஞ்சல் directornirt@nirt.res.in என்ற முகவரிக்கு 02.07.2020 அன்று மாலை 05.37 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினை நெரடியாக பெற : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : Skype Interview எனும் முறையில் ஆன்லைன் வழியாக நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nirt.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.