என்எஃப்எல் என்றழைக்கப்படும் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர், மேலாளர், அதிகாரி
பணியிடம்: ராமகுண்டம் (தெலங்கானா)
மொத்த காலி பணியிடங்கள்: 101
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பிடெக், பிஎஸ்ஸி, வேதியியல் துறையில் எம்எஸ்ஸி அல்லது எம்பிஏ,எல்எல்பி,சிஏ,சிஎம்ஏ, சிஎஸ்,ஏஎம்ஐஇ, பார்மஸி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுசெய்யும் முறை: பணி அனுபவத்தின் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது வரம்பு: 30 - 50-க்குள் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15-05-2018
மேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விவரம் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.