டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு முக்கியமான ஒரு பகுதியாக இருப்பது மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு மதிபெண் பெட்டகமாக இருக்கும் மொழிப்பாடத்தில் இருந்து கேள்விகள் பெறலாம் . போட்டி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான தமிழ் கேள்வி பதில்கள் படியுங்கள் வெற்றி பெறுங்கள் .
மொழிப்பாடமானது போட்டி தேர்வு எழுதுவோர்க்கு மிகவும் அவசியம் ஆகும் . தமிழ் மொழியில் இலக்கணம், செய்யுள், உரைநடை மற்றும் துணைபாடப்பகுதி அத்துடன், கவிஞர்கள் , கவிதைகள் என பிரிக்கலாம் .
1 நம் முன்னோர் ஒரு பொருளுக்கு காரணம் கருதாமல் இட்டு வழங்கிய பெயரை எவ்வாறு அழைப்போம்
விடை: இடுகுறி பெயர்
2 பொருளுக்கு காரணம் இட்டு வழங்கிய பெயரை எவ்வாறு அழைப்போம்
விடை : காரணப் பெயர்
3 வியங்கோல் விணைமுற்று வரும் இடங்கள் யாவை
விடை: மூவிடங்களிலும் , ஐம்பால்களிலும் வரும்
4 செயல் நிகழ்வதைக்காட்டும்
விடை: உடன்பாட்டு விணைமுற்று
5 பெயரெச்சம் என்பது
விடை: பெயர்சொல்லை ஏற்றுஒரு தொடர் பொருள் முடிவு பெறும் எச்ச விணைச்சொல் பெயரெச்சம் ஆகும்
6 தெரிநிலை பெயரெச்சம் என்பது
விடை: காலம் செயல் உணர்த்தி நின்று செய்பவன் , கருவி, நிலம் , காலம், செய்பொருள் என்னும் ஆறுவகை பெயர்கள் ஒன்றனை கொண்டு முடியும் எச்ச சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும் .
7 ஒரு பொருட் பண்மொழி என்பது
விடை: பொருள் சிறப்புக்காக ஒரு பொருளை குறிக்க பல சொற்கள் வருவது ஒரு பன்மொழி ஆகும்
8 ஒரு எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் மற்றொரு எழுத்து வந்தாலும் பெயர் மாறுபடவில்லையாயின் அதனை என்னவென அழைப்பார்
விடை: போலி
9 முதற்போலி என்பது யாது
விடை: சொல்லின் முதல் எழுத்து திரிந்து பொருள் வேறுபடாமல் வருவது முதற்போலி
10 கடைபோலி வேறு பெயர்
விடை: ஈற்றுப்போலி
சார்ந்த பதிவுகள் :
போட்டிதேர்வுக்கு தயாராகும் அனைவரும் படிக்க நடப்பு நிகழ்வுகள்
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதிறிங்களா அப்ப படிங்க நடப்பு கேள்வி பதில்கள்
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயிற்சி நடப்பு நிகழ்வுகள்