ஆசிரியர்களான நீங்க சிறப்பு வழிகாட்டி ஆசிரியராக மாணவர்கள் மனதில் இடம்பிடிக்க அர்பணிப்பு உடையவராக இருந்தால் போதும். அதுவே உங்களை சிறப்பு வழிகாட்டியாக மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் .
நீங்கள் பள்ளி, கல்லுரி ஆசிரியராக இருந்தாலும் மாணவர்களின் செய்யும் தவறை அனுமதியுங்கள் ஆனால் பக்குவமாய் மாணவர்கள் உணரும்படி மற்ற மாணவர்கள் முன் அவமதிக்காம்ல உணர்த்துங்கள் அது பெரிய ஒரு சிறப்பான போக்காகும். இது மாணவர்கள் மீண்டும் அத்தவறை என்றும் செய்ய வைக்காது .
மாணவபோக்கு என்பது வயதிற்கேற்ப மாறுபடும் அதனை ஆசிரியர்கள் என்றும் உணர வேண்டும். அதுவும் டீன் ஏஜ்களான வளர்பருவ மாணவர்களை கையாளும் ஆசிரியர்கள் சற்று கவனமுடன் செயல்படுதல் நலம் பயக்கும். இந்த வயது கோவம் , அறியாமை நிறைந்த மாணவபருவத்தின் உடல் மனமாற்றங்கள் ஏற்படும் பருவம் இதனை உளவியல் ரீதியாக கையாள வேண்டும் . இந்த பருவத்தில் அன்பு , கருணையுடன் நடத்துங்கள் , கடுமையான தண்டனையை விட கட்டுக்கோப்பாக கொண்டுசெல்லுங்கள் .
மாணவ சிறப்புத்தன்மை கல்வியில் அளவோடும் விளையாட்டு, கலையில் அதிகமாய் இருந்தால் அவர்களை படிக்க மட்டுமே கட்டாயபடுத்து போக்கைவிட்டு அவர்களின் படிப்பு பாதிக்காமல் அவர்களின் மற்ற சிறப்பு திறமையை வெளிகொணர ஆதரவளியுங்கள் அவர்களின் துறை , அவர்களுக்கான வாய்பை அறிமுகப் படுத்துங்கள் தொடர்ந்து மெறுகேற்றுங்கள் நீங்கள் அவர்கள் வாழ்வில் நிச்சயம் தவிர்க்க முடியாதவராக இருப்பிர்கள் .
அர்ஜீனனின் வில்திறமை கண்டுதான் துரோணர் பயிற்சிகொடுத்தார், பீமரின் திறமை கதாயுதத்தில் இருந்தால் அவருக்கு கதாயுதம் கற்பிக்கபட்டது . மாணவரின் திறன் அறிந்து ஊக்குவியுங்கள் ஆசிரியரே நீங்கள் வகிக்கும் பொறுப்பு என்பது அளவிட முடியாத ஒரு துறையாகும் அதனை மனதில் கொள்ளுங்கள் சிறப்பாக செயல்படுங்கள் .