அலகாபாத்தில் ஆதியின் அடுத்த ஒரு ஆங்கில புரட்சியாக ஆரம்பபள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க வழி அமைக்கிறார்.
உத்திரபிரதேசத்தில் ஆதீத் ஜோகி நடத்தும் பிஜேபி ஆட்சியில் நடக்கும் மாற்றங்கள் அறிவோம். அத்துடன் கல்வியிலும் புதிய புரட்சி நடவடிக்கையை கொண்டு வந்துள்ளார், ஆகையால் இது அறிய வேண்டிய தகவல்களில் ஒன்றாகும் . உத்திரபிரதேசத்தில் ஆங்கில கல்வி அறிவை வளர்க்கும் முக்கியமான ஒரு திட்டம் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் 45ஆயிரம் ஆரம்ப பள்ளிகளில் ஆங்கிலம் கற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
மாணவர்கள் அதனை சிறந்த முறையில் கற்க அதற்கான நிதியுதவியை யுனிசெஃப் இடம் பெற்று இத்தகைய கல்வியை ஆரம்பிக்கின்றர். இது மாணவர்களை ஆங்கிலத்தில் திறம்பட பேச வைக்கும் ஒரு சிறந்த முயற்சியாகும். தினமும் காலை 10.45 முதல் 11 மணி வரை ஆங்கிலம் ஒலிப்பரப்பு செய்யப்படும். ஒலிப்பரப்பை கேட்டு மாணவர்கள் பயிற்சி தொடங்க வேண்டும் . அடுத்தது உரையாடலுக்கான நேரம் அதிகம் ஒதுக்கப்படும், மாணவர்களுக்கு 90 பாகங்களாக ஆங்கிலம் கற்றுத்தரப்படும் .
ஆரம்ப பள்ளியில் தொடங்கும் இந்த முயற்சி முன்னேற்ற இடத்திற்கு கொண்டு செல்லும் என்று கருதப்படுகிறது. தமிழகத்திலும் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கற்றுத்தர இவ்வாறு அரசு புதிய வழிமுறைகளை புகட்டலாம். சிறந்த மாணவர்களை உருவாக்கும் பொருப்பை அனைத்து அரசும் உணர வேண்டும் .
சார்ந்த படிப்புகள் :
பள்ளிகளில் டிஜிட்டல் திட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
தமிழ்நாட்டு பள்ளிகளில் பழமை ஆர்ட் கேலரிகள் அமைக்க அரசு ஆணை
மாநில பாடத்திட்டங்கள் தக்க குழுவோடு தரமானதாக உருவாக்கப்பட்ட்டு வருகின்றது
ஆசிரியர்கள் பற்றாகுறை போக்கி தேவையான ஆசிரியர்களை இடமாற்ற முடிவு