டெல்லி : தமிழகத்தில் 2 பல்கலைக்கழகங்களில் தொலை தூர வகுப்புகளை நடத்துவதற்கான அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழு நீட்டிக்கவில்லை.
தொலை நிலை வகுப்புகள் அங்கீகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து 5 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் 2 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அங்கீகாரம் நீட்டிக்கப்படவில்லை.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி் நிறுவனங்கள் பட்டியலை சரி பார்த்து பின்னர் மாணவர்கள் அதில் சேருமாறும் யுஜிசி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார் சபா மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் நீட்டிக்கப்படவில்லை. 3 நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (2016-17 டூ 2017-18)
2. தமிழ் பல்கலைக்கழகம் (2016-17 டூ 2017-18)
3. தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார் சபா (2016-17)
4. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (2015-16)
5. சாஸ்திரா பல்கலைக்கழகம் (2016-17 டூ 2017-18)
இதுதொடர்பான விவரங்களை கீழ்க்கண்ட இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
http://www.ugc.ac.in/deb/notices.html
http://www.ugc.ac.in/ugc_notices.aspx
அதேபோல அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலை இதில் போய்ப் பார்க்கலாம்:
http://www.ugc.ac.in/deb/pdf/Recognition for 2016-17- DEB.pdf