சிறப்பாசிரியர்கள் பணி நியமனமத்தில் மாற்றம் கொண்டு வர அரசு தீர்மானித்து வருகின்றது. 1188 சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றம் , நேர்முக தேர்வு நீக்கப்படுகிறது.
அரசு பள்ளி தையல், ஒவியம் ,இசை, கைவிணை மற்றும் உடல்தகுதி ஆசிரியர்கள் நியமனமத்தில் அரசு மாற்றம் செய்திருக்கின்றது. முன்பு சிறப்பு ஆசிரியர்கள் சீனியாரிட்டி மூலம் ஆசிரிய பணியில் நியமிக்கப்பட்டனர். அதன் பின் 2011 இல் ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு மூலமே நியமிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. 2014 இல் அதுகுறித்து அரசாணை பிறப்பிக்கப்ப்ட்டு சிறப்பாசிரியர்கள் தேர்வு நடத்தப்பட்டு அவர்களுக்கான நியமனம் கொண்டுவரப்பட்டது. அவர்களுக்கான எழுத்து தேர்வில் தேர்வில் 95 மதிபெண்கள் மற்றும் என்எஸ்எஸ், ஃபைன் ஆர்ட்ஸ், போன்ற கல்வி அல்லாத தனித்திறங்களுக்கு 5 மதிபெண்கள் வழங்கினார்கள் இவற்றில்
தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் அனுபவங்களுக்கேற்ப ஒன்று ம்ற்றும் அறை மதிபெண் வழங்கப்படும். ஆனால் இதில் சில மாறுதலகள் குறித்து ஆசிரியர்கள் தேர்வில் பரிந்துறைக்கப்பட்டது .
இந்நிலை 1188 சிறப்பாசிரியர்கள் நியமனத்தின் அறிவிப்பு அடுத்தவாரம் வரும் எனபட்டது. அத்துடன் சிறப்பாசரியர் தேர்வுக்கு எழுத்து தேர்வு முறையில் இருந்த அறை மார்க் வழங்கும் சிக்கல் முறை நீக்கப்பட்டு ஒரு மதிபெண்ணாக மாற்றப்படும் என் ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிப்பு . மேலும் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் இருந்த நேர்முகத்தேர்வு முறை நீக்கப்படுகின்றது . அத்துடன் சிறப்பாசிரியர்கள் தேர்வு குறித்து அடுத்த வாரம் அறிவிப்பு வரும் என்று தகவல் கிடைத்துள்ளது.
சிறப்பாசிரியர்கள் தகுதியில் சுமார் இரண்டு லட்சம் ஆசிரியர்கள் காத்துகிடக்கின்றனர். தேர்வு அறிவிப்பு கிடைத்ததும் போட்டி தேர்வுக்கு கடுமையான போட்டி இருக்கும்
சார்ந்த பதிவுகள் :
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியிருக்கீங்களா? தேர்வுக்குரிய விடை வெளியீடு...!
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிக்கப் போறாங்க.... பி.ஜி. ஸ்டூடன்ஸ் தயாரா இருங்க...