தமிழ்நாட்டில் மூவாயிரம் சுமார்ட் வகுப்பினை உருவாக்கி கம்ப்யூட்டர் கல்வி உருவாக்குவ்தாக அமைச்சர் தகவல் அளித்துள்ளார் .
தமிழ்நாட்டில் சுமார்ட் வகுப்புகள் 9 ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு
சுமார்ட் வகுப்புகள் அமைத்து கம்ப்யூட்டர் கல்வி கற்றுத்தரப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.மேலும் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கம்பியூட்டர் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் சுமார்ட் வகுப்புக்கள் 3000 பள்ளிகளில் 2லட்சம் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்,அத்துடன் தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை படிப்படியாக பாடத்திட்டம் புதிதாக உருவாக்கப்படும்.
புதிய பாடத்திட்டங்கள் உருவாக்குவது குறித்து கலைவாணர் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளி கருந்தரங்கத்தில் செங்கோட்டையன் பேசியதாவது தமிழகத்தை கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக உருவாக்குவது குறித்து அதிக திட்டங்களை உருவாக்கி வருகிறோம் . தமிழ்நாட்டின் மாணவர்கள் மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் அளவிற்கு அவர்களின் கல்வித்தரத்தை வலிமையானதாக உருவாக்குவதுடன் மாணவர்கள் பயில 54000 கேள்விகள் அடங்கிய வினாக்களை தொகுத்து வழங்குகிறோம் .
தமிழ்நாட்டில் நாம் 40ஆயிரம் சுயநிதி பள்ளிகள் இயங்கி வருகின்றன, அப்பள்ளிகளின் கல்வித்தரத்தை விட சிறப்பான கல்வியை அரசு பள்ளிகள் உடையதாக உருவாக்குவோம். பள்ளி வளாகத்தில் இலவச ஃபை-வை வசதிகள் 9 ஆம் வகுப்புகள் முதல் பிளஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் . தமிழகத்தில் மாணவர்கள் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றை விளக்கும் கல்வி வழங்கப்படும் என்றார் .
இவ்வாறு கல்வி அமைச்சர் பகுதி நேர ஆசிரியர்களின் தேவையை பூர்த்தி செய்ய குழு அமைப்பதாக அறிவித்திருந்தார் எனபது குறித்து நாம் அறிந்திருந்தோம்.
சார்ந்த பதிவுகள் :
தமிழ்நாடு அரசு பகுதிநேர ஆசிரியர்களுக்காக ஊதியகுழு அமைக்கும் என அமைச்சர் அறிவுப்பு
பள்ளிகளில் டிஜிட்டல் திட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது