சென்னை : தமிழகத்தில் இன்று பிளஸ்2 முடிவுகள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. மாணவ மாணவியர்கள் வணிகவியல் பாடத்தில் அதிக அளவில் முழுமதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இந்த வருடம் ரேங்க் பட்டியல் கிடையாது. மாநில அளவில் மதிப்பெண் பட்டியலும் கிடையாது. அதற்குப் பதில்தான் கிரேடு முறை மதிப்பெண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாடவாரியாக முழுமதிப்பெண் பெற்றவர்கள் பட்டியல்
இயற்பியலில் 187 பேர் முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர்.
வேதியியல் பாடத்தில் 1123 பேர் முழு மதிப்பெண் (200) பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
பயாலஜி பாடத்தில் 221 மாணவர்கள் முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர்.
கணித பாடத்தில் 3656 மாணவர்கள் முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர்.
தாவரவியல் பாடத்தில் 22 பேர் முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர்.
விலங்கியல் பாடத்தில் 4 மாணவர்கள் மட்டுமே முழு மதிப்பெண் (200) பெற்று சாதித்துள்ளனர்.
வணிகவியல் பாடத்தில் 8301 பேர் முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர். (அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள பாடம்)
கணக்கியல் பாடத்தில் 5597 மாணவர்கள் முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர்.
கணினி அறிவியலில் 1647 பேர் முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர்.
வணிக கணிதத்தில் 2551 பேர் முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர்.
வரலாறு பாடத்தில் 336 மாணவர்கள் முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர்.
பொருளாதார பாடத்தில் 1717 மாணவர்கள்முழு மதிப்பெண் (200) பெற்றுள்ளனர்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களில் யாரும் முழு மதிப்பெண் எடுக்கவில்லை.