சென்னை : பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு 6ந் தேதி கடைசி நாளாகும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
பிளஸ்2 (மேல்நிலை) தேர்வை இந்த ஆண்டு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 3ந் தேதி பிற்பகல் 1 மணி முதல் 6ந் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) மாலை 6 மணிக்குள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.