தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் தயாரிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. பாடத்திட்டங்களை மாற்றும் பணி நடகின்றது . இதுவரை புதியபாட்த்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் 821 பேர் பாடவாரியாக புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்க பதிவுசெய்துள்ளனர் . இந்நிலையில் மாநில ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி கூறிகையில் புதிய பாடத்திட்டங்களை 1 முதல் 12 வரை மாற்ற அரசு ஆணை பிறப்பித்துள்ளது . அத்துடன் 1, 6,9,11 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் ஜனவரி மாததிற்க்குள் முடிவடையும் 2018 மற்றும் 2019 வருடங்களுக்கான பாடத்திட்ட மாற்றத்தில் அமல்ப்படுத்தப்படும் . ஆகவே ஐஐடி, ஐஐஎம் அண்ணா பல்கலைகழக ஆசிரியர்களிடம் ஆலோசனை நடைபெற்று வருகின்றது என்று க. அறிவொளி தெரிவித்தார்.
இந்த ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால் நீட் தேர்வு எழுதும் அளவிற்கு பள்ளி பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன . மாணவர்கள் நீட் தேர்வு எழுத மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பதால் அரசு இதனை கருத்தில் கொண்டு பாடப்புத்தகங்களை மாற்றி சிபிஎஸ்இ தரத்திற்கு மாணவர்களை உருவாக்க முனைந்துள்ளது . ஆகவே 2018 முதல் மாணவர்களுக்கு புதியபாடத்திட்டங்கள் வழங்குவதன் மூலம் மாணவர்கள் நீட் தேர்வை சந்திக்க சிரமப்படவேண்டிய அவசியம் இருக்காது மற்றும் மத்திய அரசின் எந்த தேர்வையும் எளிதில் எதிர்கொள்வார்கள் என பள்ளி கல்வியமைச்சர் இதனை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சார்ந்த தகவல்கள் :
பள்ளி கல்லுரிகளில் சட்டம் பாடமாக்கப்பட சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு
பாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. கால அவகாசம் நீட்டிப்பு