எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் விண்ணப்பம் பெறலாம். மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங் வரை அனைத்து ஏற்ப்பாடுகளும் தயாராகவுள்ளன .
எம்பிபிஎஸ் படிப்புக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு உத்தரவு இதையடுத்து மே 7ஆம் தேதி நீட் தேர்வு எழுதினர் மாணவர்கள். நீட் தேர்வு முடிவு வெளியிட தடை மற்றும் நீட் தேர்வு முடிவு வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு . இதனையடுத்து நீட் தேர்வு முடிவு பல இழுபரிகளுக்கு பிறகு ஜூன் 23 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து திட்டமிட்டப்படி மருத்துவ மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பத்தை பெற்றுகொள்ளலாம் .
நீட் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மதிபெண் அடிப்படையில் மருத்துவ விண்ணப்பம் வெளியிடப்படும் . மாநிலத்தில் உள்ள அரசு கல்லுரிகள் 22லும் நேரிலும் ஆன்லைனிலும் ஜூலை 7 முதல் பெற்றுக்கொள்ளலாம் ஜூலை 8 முதல் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் .
விண்ணப்ப படிவங்கள் பெற செயலாளர் , தேர்வு கமிட்டி, கீழ்பாக்கம் ,சென்னை என்ற பெயரில் ரூபாய் 500க்கு டிடி எடுக்க வேண்டும் .சுயநிதி தனியார் கல்லுரியெனில் 1000 ரூபாய்க்கு டிடி எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கட்டணமில்லை. ஆனால் அவர்கள் சாதிசான்று சமர்ப்பிக்க வேண்டும் .
விண்ணப்பங்கள் அனைவருக்கும் வழங்கப்படும் மாணவர்கள் டிடி தொகை செலுத்த அந்தந்த மருத்துவகல்லுரிகளில் டிடிக்கான தொகை செலுத்த வங்கிகள் உள்ளன . மேலும் காலை 10முதல் மாலை 5 மணிவரை காசோலை செலுத்தலாம் . மதிபெண் நகல் வழங்கவேண்டிய அவசியமில்லை, ஜூலை 14 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வழங்கப்படும்.