சென்னை : இனைஞர்கள் ராணுவப் பணிகளில் சேர்வதை பெருமையாக கருதுகிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்திய ராணுவமும் பல்வேறு சிறப்பு பயிற்சி நுழைவின் அடிப்படையில் அவ்வப்போது இளைஞர்களை படைப்பிரிவில் சேர்த்து வருகிறது. தற்போது என்ஜீனியரிங் படித்தவர்கள் 40 பேருக்கு ராணுவத்தில் வேலை வாய்ப்புக் காத்திருக்கிறது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 02.01.1991 மற்றும் 01.01.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். இவ்விரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்க தகுதி உயைவர்கள் ஆவர்.
கல்வித் தகுதி
என்ஜீனியரிங் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு இறுதி பருவத்தேர்வு எதிர் கொள்பவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு செய்யும் முறை
சர்வீஸ் செலக்சன் போர்டு (எஸ்.எஸ்.பி) நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என இருநிலைகளில் தேர்வுகள் நடைபெறும். குறிப்பிட்ட உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். தகுதி படைத்தவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
இணையதளம் வழியாகவே இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க முடியும். 14.06.2017ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ள www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம்.