சென்னை: பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் எனக் கூறியவர்
அ. நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை ஆ. திருமூலர் இ. கண்ணதாசன் ஈ. பாரதியார்
(விடை : நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை)
2. பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடப்பட்ட நூல் பெயர் கூறுக.
அ. கம்பராமாயணம் ஆ. திருவாசகம் இ. பெரியபுராணம் ஈ. திருவருட்பா
(விடை : பெரியபுராணம்)
3. குட்டி திருவாசகம் எனப்படும் நூல் எது?
.அ. திருக்கயிலாய ஞான உலா ஆ. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி இ. திருமுருகாற்றுப்படை ஈ. திருத்தொண்டர் புராணம்
(விடை : திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி)
4. இந்தியா என்ற வாரப் பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
அ. நாமக்கல் கவிஞர் ஆ. பாரதியார் இ. பாரதிதாசன் ஈ. வாணிதாசன்
(விடை : பாரதியார்)
5. முதலில் தொகுக்கப்பட்டதொகை நூலாக கருதப்படும் நூல் எது?
அ. திருக்குறள் ஆ. சிலப்பதிகாரம் இ. திரிகடுகம் ஈ. குறுந்தொகை
(விடை : குறுந்தொகை)
6. அப்பர் அடிகள் என்று கூறப்படுபவர் யார்?
அ. திருஞானசம்பந்தர் ஆ. திருநாவுக்கரசர் இ. சுந்தரர் ஈ. மாணிக்கவாசகர்
(விடை : திருநாவுக்கரசர்)
7. கடையெழு வள்ளல்களில் இல்லாத ஒருவர் யார்?
அ. பாரி ஆ. வல்வில் ஓரி இ. பேகன் ஈ. துந்துமாரி
(விடை : துந்துமாரி)
8. புற நானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
அ. கார்டுவெல் ஆ. பெஸ்கி இ. ஜி.யு.போப் ஈ. வீரமா முனிவர்
(விடை : ஜி.யு.போப்)
9. நெடுந்தொகை எனக் குறிக்கப் பெறும் நூல் பெயர் கூறுக.
அ. அகநானூறு ஆ. சிலப்பதிகாரம் இ. கம்பராமாயணம் ஈ. பெருங்கதை
(விடை : அகநானூறு)
10. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப் பெறும் நூல் எது?
அ. சீறாப்புராணம் ஆ. பெரியபுராணம் இ. சிலப்பதிகாரம் ஈ. நத்திக் கலம்பகம்
(விடை : சிலப்பதிகாரம்)