சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர் என்பதை இயற்றியவர் யார்?
அ. பாரதிதாசன் ஆ. பாரதியார் இ. கண்ணதாசன் ஈ. வாணிதாசன்
(விடை : பாரதிதாசன்)
2. தமிழ்த்தாத்தா இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர் யார்?
அ. திரு.வி.க. ஆ. உ.வே.சா. இ. பாரதியார் ஈ. கவிமணி
(விடை : உ.வே.சா)
3. தமக்கென முயலா நோன்றார் இவ்வடிகள் பயின்று வரும் நூல் எது?
.அ. கம்பராமாயணம் ஆ. சீவக சிந்தாமணி இ. பெரிய புராணம் ஈ. புறநானூறு
(விடை : புறநானூறு)
4. இரட்டைக் காப்பியத்தில் ஒன்றைக் கண்டறிக
அ. பெரியபுராணம் ஆ. மணிமேகலை இ. சீவக சிந்தாமணி ஈ. வளையாபதி
(விடை : மணிமேகலை)
5. கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் யார்?
அ. சேக்கிழார் ஆ. திருவள்ளுவர் இ. கம்பர் ஈ. கபிலர்
(விடை : கம்பர்)
6. நீடு துயில் நீங்கப் பாடி வந்த நிலா என யார் யாரை பாராட்டினார்?
அ. பாரதியைப் பாரதிதாசன் பாராட்டினார் ஆ. பாரதிதாசனை பாரதி பாராட்டினார் இ. கவிமணியைப் பாரதி பாராட்டினார் ஈ. கண்ணதாசனை பாரதி பாராட்டினார்
(விடை : பாரதியைப் பாரதிதாசன் பாராட்டினார்)
7. 96 வகை சிற்றிலக்கிய நூல் எது?
அ. சதுரகராதி ஆ. கலித்தொகை இ. பரிபாடல் ஈ. ஐங்குறுநூறு
(விடை : சதுரகராதி)
8. சொல்லின் செல்வர் என அழைக்கபடுபவர் யார்?
அ. அறிஞர் அண்ணா ஆ. ரா.பி.சேதுப்பிள்ளை இ. மு. வரதராசனார் ஈ. தேவநேயப்பாவணர்
(விடை : ரா.பி.சேதுப்பிள்ளை)
9. பண்டித மணி என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் தமிழ்ச் சான்றோர் யார்?
அ. இரா.பி.சேதுப்பிள்ளை ஆ. வள்ளலார் இ. மு. கதிரேசச் செட்டியார் ஈ. திரு.வி.கலியாணசுந்தரனார்
(விடை : மு. கதிரேசச் செட்டியார்)
10. உலகப்பொதுமறை அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
அ. திருக்குறள் ஆ. கம்பராமாயணம் இ. சிலப்பதிகாரம் ஈ. பெரியபுராணம்
(விடை : திருக்குறள்)