சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடியவர் யார்?
அ. கபிலர் ஆ. பரணர் இ. கணியன் பூங்குன்றனார் ஈ. ஔவையார்
(விடை : கணியன் பூங்குன்றனார்)
2. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் பெயர் தருக. இராமகாதை
அ. சீவக சிந்தாமணி ஆ. சிலப்பதிகாரம் இ. மணிமேகலை ஈ. இராமாயணம்
(விடை : இராமாயணம்)
3. தீதும் நன்றும் பிரர்தர வாரா - இக்கூற்றைச் சொன்ன புலவர் யார்?
.அ. ஔவையார் ஆ. பொன்முடியார் இ. கணியன் பூங்குன்றனர் ஈ. கபிலர்
(விடை : கணியன் பூங்குன்றனர்)
4. நாமக்கல் கவிஞர் என்ற தொடரால் குறிக்கப்படும் சான்றோர் யார்?
அ. தேசிக விநாயகம் பிள்ளை ஆ. வள்ளலார் இ. பாரதிதாசன் ஈ. வெ, இராமலிங்கம் பிள்ளை
(விடை : வெ, இராமலிங்கம் பிள்ளை)
5. சக்கரவர்த்தினி என்ற பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றியவர் யார்?
அ. கந்தசாமி புலவர் ஆ. வாணிதாசன் இ. பாவேந்தர் ஈ. பாரதியார்
(விடை : பாரதியார்)
6. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
அ. பாரதியார் ஆ. சுரதா இ. திரு.வி.க ஈ. பாரதிதாசன்
(விடை : சுரதா)
7. முத்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அ. கண்ணதாசன் ஆ. ஔவையார் இ. கி.ஆ.பெ.விசுவநாதம் ஈ. வேதநாயகம் பிள்ளை
(விடை : கி.ஆ.பெ.விசுவநாதம்)
8. பசித்திரு தனித்திரு விழிதிதிரு என்று மக்களுக்கு போதித்தவர் யார்?
அ. பாரதியார் ஆ. கம்பர் இ. கண்ணதாசன் ஈ. இராமலிங்க அடிகள்
(விடை : இராமலிங்க அடிகள்)
9. தொண்டர் சீர் பரவுவார் எனப் பாராட்டப்படும் சான்றோர் பெயர் கூறுக்.
அ. கம்பர் ஆ. திருநாவுக்கரசர் இ. சேக்கிழார் ஈ. திருவள்ளுவர்
(விடை : சேக்கிழார்)
10. கான மஞ்சைக்கு கலிங்கம் நல்கிய புகழுக்குரியவன் யார்?
அ. பாரி ஆ. பேகன் இ. வல்வில் ஓரி ஈ. அதியமான்
(விடை : பேகன்)