தமிழ்நாட்டு வானம்பாடி எனப் போற்றப்பட்டவர் யார்?... பொது தமிழ் கேள்விகள்

டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுதமிழ் வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா எனப் பாரதியாரை பாராட்டியவர் யார்?

அ. கவிமணி ஆ. பாரதிதாசன் இ. நாமக்கல் கவிஞர் ஈ. சுரதா

(விடை : பாரதிதாசன்)

2. பாரதியார் முன் பாடப்பட்ட எப்பாடல் கனகசுப்புரத்தினம் அவர்களை பாரதிதாசன் என்று தமிழுக்கு அறிமுகப்படுத்தியது

அ. கானி நிலம் வேண்டும் பராசக்தி ஆ. அச்சமில்லை அச்சமில்லை இ. செந்தமிழ் நாடென்னும் போதினிலே ஈ. எங்கெங்கு காணினும் சக்தியடா

(விடை : எங்கெங்கு காணினும் சக்தியடா)

தமிழ்நாட்டு வானம்பாடி எனப் போற்றப்பட்டவர் யார்?...  பொது தமிழ் கேள்விகள்

3. தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார்?

அ. பாரதியார் ஆ. கவிமணி இ. நாமக்கல் கவிஞர் ஈ. பாரதிதாசன்

(விடை : நாமக்கல் கவிஞர்)

4. புரட்சிக்கவி என்னும் சிறப்பினைப் பெற்றவர்

அ. பாரதியார் ஆ. கவிமணி இ. கண்ணதாசன் ஈ. பாரதிதாசன்

(விடை : பாரதிதாசன்)

5. தமிழ்நாட்டு வானம்பாடி எனப் போற்றப்பட்டவர் யார்?

அ. வாணிதாசன் ஆ. கண்ணதாசன் இ. முடியரசன் ஈ. சுரதா

(விடை : முடியரசன்)

6. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் என்று தனி மனித வாழ்வின் பண்பினைக் கூறியவர் யார்?

அ. மருதகாசி ஆ. கண்ணதாசன் இ. உடுமலை நாராயண கவி ஈ. சுரதா

(விடை : கண்ணதாசன்)

7. பாரதிதாசன் தமிழைத் தவிர பின்வரும் மொழிகளுள் எவற்றில் புலமை பெற்றவராக இருந்தார்?

அ. சமஸ்கிருதம் ஆ. உருது இ. பிரெஞ்சு ஈ. மலையாளம்

(விடை : பிரெஞ்சு)

8. இருபதாம் நூற்றாண்டினை எக்காலம் என்று அழைக்கலாம்?

அ. உரைநடைக் காலம் ஆ. கற்காலம் இ. இலக்கிய காலம் ஈ. இலக்கணக் காலம்

(விடை : உரைநடைக் காலம்)

9. பாரதிதாசன் பிறந்த ஊரின் பெயர் எது?

அ. புதுச்சேரி ஆ. நெற்கட்டு செவல்பாளையம் இ. சிவகங்கை ஈ. திருநெல்வேலி

(விடை : புதுச்சேரி)

10. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர் என்ற பாடலை இயற்றிப் பெரும் புகழ் அடைந்தவர் யார்?

அ. வெ. இராமலிங்கனார் ஆ. தெ.பொ.மீனாட்சி சுந்தரம் இ. கவிமணி தேசிக விநாயகம் பிள்றை ஈ. தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்

(விடை : இராமலிங்கனார்)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X