சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. ஆசிய ஜோதி அன்பின் வெற்றி யாருடைய நூல்கள்?
அ. திரு.வி.க. ஆ. கவிமணி தேசிக விநாயகனார் இ. அப்பர் சுவாமிகள் ஈ. உ.வே.சா
(விடை : கவிமணி தேசிக விநாயகனார்)
2. குழந்தைச் செல்வம் - நூலின் ஆசிரியர் யார்?
அ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆ. திரு.வி.க இ. வேங்கடசாமி நாட்டார் ஈ. வ.உ.சி
(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
3. பாரதியாரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் எது?
அ. சுதேசி மித்திரன் ஆ. இந்தியா இ. விவேகபானு ஈ. கர்மயோகி
(விடை : விவேகபானு)
4. ஆசிய ஜோதி என்ற நூலினை எழுதியவர் யா?
அ. திரு.வி.க ஆ. கவிமணி தேசிக விநாயகனார் இ. அப்பர் சுவாமிகள் ஈ. உ.வே.சாமிநாத ஐயர்
(விடை : கவிமணி தேசிக விநாயகனார்)
5. அழகின் சிரிப்பு நூலை எழுதியவர் யார்?
அ. பாரதிதாசன் ஆ. பாரதியார் இ. நாமக்கல் கவிஞர் ஈ. திரு.வி.க
(விடை : பாரதிதாசன்)
6. தேசிய கீதங்கள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
அ. பாரதியார் ஆ. சுரதா இ. பாரதிதாசன் ஈ. வாணிதாசன்
(விடை : பாரதியார்)
7. பின்வருபவர்களுள் குழந்தை இலக்கியம் வளர வழிகாட்டியவர் யார்?
அ. அழ. வள்ளியப்பா ஆ. பாரதிதாசன் இ. வாணிதாசன் ஈ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)
8. ஞானரதம் என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?
அ. கண்ணதாசன் ஆ. பாரதியார் இ. சுரதா ஈ. எவருமில்லை
(விடை : பாரதியார்)
9. பின்வரும் இலக்கியப் படைப்புகளுள் பாரதிதாசன் அவர்களால் எழுதப்படாத நூல் எது?
அ. சுதேச கீதங்கள் ஆ. குடும்ப விளக்கு இ. பாண்டியன் பரிசு ஈ. தேனருவி
(விடை : சுதேச கீதங்கள்)
10. ஷெல்லிதாசன் என்ற புனைப் பெயரால் அழைக்கப்பெற்றவர் யார்?
அ. பாரதிதாசன் ஆ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இ. நாமக்கல் கவிஞர் ஈ. பாரதியார்
(விடை : பாரதியார்)