சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. பாரதிதாசன் இறந்த ஊர் எது?
அ. தஞ்சை ஆ. சென்னை இ. திருச்சி ஈ. மதுரை
(விடை : சென்னை)
2. பின்வருபவனவற்றுள் பட்டுக்கோட்டை கல்யான சுந்தரனாரின் வேறு சிறப்பு பெயர்களுள் ஒன்று எது?
அ. பாமர மக்களின் கவிஞர் ஆ. தமிழ்நாட்டுத் தாகூர் இ. புதுமைக் கவிஞர் ஈ. குழந்தை மனம் கொண்ட கவிஞர்
(விடை : பாமர மக்களின் கவிஞர்)
3. சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் யார்?
அ. திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆ. மு. வரதராசனார் இ. விவேகானந்தர் ஈ. வெ. இராமலிங்கனார்
(விடை : வெ. இராமலிங்கனார்)
4. இவற்றுள் கவிஞர் சுரதா எழுதாத நூல் எது?
அ. புகழ்மாலை ஆ. பட்டத்தரசி இ. சுவரும் சுண்ணாம்பும் ஈ. முகில் விடு தூது
(விடை : முகில் விடு தூது)
5. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை பின்வரும் எதற்கு உரை எழுதினார்?
அ. திருக்குறள் ஆ. நாலடியார் இ. மணிமேகலை ஈ. சீவகசிந்தாமணி
(விடை : திருக்குறள்)
6. நாமக்கல் கவிஞர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எந்த ஊரில் பிறந்தார்?
அ. திருச்செங்கோடு ஆ. மோகனூர் இ. குமாரபாளையம் ஈ. சங்ககிரி
(விடை : மோகனூர்)
7. தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர் யார்?
அ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆ. பாரதிதாசன் இ. பாரதியார் ஈ. நாமக்கல் கவிஞர்
(விடை : பாரதியார்)
8. கவிமணியால் ஆங்கில மொழியில் இருந்து தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை நூல் எது?
அ. ஆசிய ஜோதி ஆ. காந்தளூர்ச்சாலை இ. மலரும் மாலையும் ஈ. மருமக்கள் வழி மான்மியம்
(விடை : ஆசிய ஜோதி)
9. அழகின் சிரிப்பு என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?
அ. பாரதிதாசன் ஆ. பாரதியார் இ. நாமக்கல் கவிஞர் ஈ. திரு.வி.க
(விடை : பாரதிதாசன்)
10. மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்ற பாடல்வரிகளைக் கொண்ட பாடலை இயற்றியவர் யார்?
அ. பாரதியார் ஆ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இ. பாரதிதாசன் ஈ. நாமக்கல் கவிஞர்
(விடை : கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை)