சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. கண்ணதாசன் பெற்றோர்கள் யார்?
அ. சாத்தப்பன் - விசாலாட்சி ஆ. சுப்புராயலு - சீதாலட்சுமி இ. அரங்க திருக்காமு - துளசியம்மாள் ஈ. அருணாசலம் - விசாலாட்சி
(விடை : சாத்தப்பன் - விசாலாட்சி)
2. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
அ. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆ. ஜீவானந்தம் இ. கண்ணதாசன் ஈ. வெ. இராமலிங்கனார்
(விடை : வெ. இராமலிங்கனார்)
3. யாருடைய கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன?
அ. பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. வாலி ஈ. சுரதா
(விடை : பாரதியார்)
4. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?
அ. நாமக்கல் கவிஞர் ஆ. கண்ணதாசன் இ. பாரதியார் ஈ. பாரதிதாசன்
(விடை : பாரதிதாசன்)
5. கம்பரும் வால்மீகியும் - என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?
அ. கவிமணி ஆ. பாரதிதாசன் இ. பாரதியார் ஈ. நாமக்கல் கவிஞர்
(விடை : நாமக்கல் கவிஞர்)
6. கண்ணதாசன் புனைப்பெயர்களுள் ஒன்று?
அ. வணங்காமுடி ஆ. புரட்சிக் கவிஞர் இ. பாவலரேறு ஈ. புதுமைக் கவிஞர்
(விடை : வணங்காமுடி)
7. உமர்க்கய்யாம் என்பவர் யார்?
அ. இத்தாலிக் கவிஞர் ஆ. பாரசீகக் கவிஞர் இ. இந்திக் கவிஞர் ஈ. உலகப் பயணி
(விடை : பாரசீகக் கவிஞர்)
8. பைந்தமிழ் தேர்ப்பாகன் அவனொரு செந்தமிழ்த் தேனீ சிந்துக்கு தந்தை என பாரதியாரை புகழ்ந்த கவிஞர் யார்?
அ. பாரதிதாசன் ஆ. நாமக்கல் கவிஞர் இ. கண்ணதாசன் ஈ. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
(விடை : பாரதிதாசன்)
9. இவற்றுள் கண்ணதாசனின் புனைப்பெயர் அல்லாதது எது?
அ. தமிழ் ஒளி ஆ. காரை முத்துப் புலவர் இ. வணங்காமுடி ஈ. கமகப்பிரியா
(விடை : தமிழ் ஒளி)
10. கவிஞர் சுரதாவின் வேறு நூல்களுள் ஒன்று
அ. மங்கையர்க்கரசி ஆ. தொடுவானம் இ. பாட்டு பிறக்குமடா ஈ. இரவு வரவில்லை
(விடை : மங்கையர்க்கரசி)