சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவமே - இவ்வடியைப் பாடியவர் யார்?
அ. மனோன்மணியம் பெ. சுந்தரனார் ஆ. கவிமணி இ. கண்ணதாசன் ஈ. பாரதிதாசன்
(விடை : மனோன்மணியம் பெ. சுந்தரனார்)
2. அறுபத்து மூவர் புராணம் என்று அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
அ. சீவக சிந்தாமணி ஆ. திருவிளையாடற் புராணம் இ. பெரிய புராணம் ஈ. சீறாப்புராணம்
(விடை :பெரிய புராணம்)
3. ஈரடி வெண்பா எனப் போற்றப்படும் நுல் எது?
.அ. பள்ளு ஆ. திருக்குறள் இ. பழமொழி ஈ. திருவாசகம்
(விடை : திருக்குறள்)
4. வான்புகழ் கொண்ட பெருந்தகையார் யார்?
அ. சேக்கிழார் ஆ. திருவள்ளுவர் இ. திருத்தக்க தேவர் ஈ. இளங்கோவடிகள்
(விடை : திருவள்ளுவர்)
5. தாயுமானவர் விசயரகுநாத சொக்க நாதரிடம் எந்த பணியில் இருந்தார்?
அ. அமைச்சர் ஆ. படைத்தலைவர் இ. அரசுக் கணக்கர் ஈ. குறுநில மன்னர்
(விடை : அரசுக் கணக்கர்)
6. சிலம்புச் செல்வர் என்றழைக்கப்படுபவர் யார்?
அ. இளங்கோவடிகள் ஆ. ம.பொ.சிவஞானம் இ. இராஜாஜி ஈ. கல்கி
(விடை : ம.பொ.சிவஞானம்)
7. முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அ. மூன்றுரை அரையனார் ஆ. நல்லாதனார் இ. திருவள்ளுவர் ஈ. ஒட்டக்கூத்தர்
(விடை : திருவள்ளுவர்)
8. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று போற்றப்படும் நூல் எது?
அ. சிலப்பதிகாரம் ஆ. சீறாப்புராணம் இ. திருக்குறள் ஈ. குண்டலகேசி
(விடை : சிலப்பதிகாரம்)
9. கவியோகி என்ற சொல் யாரைக் குறிக்கும்?
அ. சுப்பிரமணிய பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. சுத்தானந்த பாரதியார் ஈ. தேசிய விநாயகம் பிள்ளை
(விடை : சுத்தானந்த பாரதியார்)
10. மாதானுபங்கி என்று அழைக்கப்படுபவர் யார்?
அ. திருவள்ளுவர் ஆ. கம்பர் இ. இளங்கோவடிகள் ஈ. சீத்தலைச் சாத்தனார்
(விடை : திருவள்ளுவர்)