சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது தமிழ் வினா விடைகள்
1. நீதி நூல் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூர் எது?
அ. திருக்குறள் ஆ. பழமொழி இ. திரிகடுகம் ஈ. உலா
(விடை : திருக்குறள்)
2. செக்கிழுத்தச் செம்மல் எனப் பாராட்டப் பெறுபவர் யார்?
அ. அறிஞர் அண்ணா ஆ. பாரதியார் இ. வ.உ. சிதம்பரம் பிள்ளை ஈ. கண்ணதாசன்
(விடை : வ.உ. சிதம்பரம் பிள்ளை)
3. நம்பியாரூரன் எனப்படுவர் யார்?
.அ. ஞான சம்பந்தர் ஆ. நாவுக்கரசர் இ. சுந்தர் ஈ. மாணிக்கவாசகர்
(விடை : சுந்தர்)
4. புரட்சிக் கவிஞர் என அழைக்கப்படும் சான்றோர் யார்?
அ. இளங்கோவடிகள் ஆ. பாரதிதாசன் இ. கண்ணதாசன் ஈ. பாரதியார்
(விடை : பாரதிதாசன்)
5. அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் பெயர் தருக - திருத்தொண்டர் புராணம்
அ. சீவக சிந்தாமணி ஆ. திருவிளையாடற் புராணம் இ. பெரிய புராணம் ஈ. சீறாப் புராணம்
(விடை : பெரிய புராணம்)
6. அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது எனக் கூறியவர் யார்?
அ. திருவள்ளுவர் ஆ. கம்பர் இ. ஔவையார் ஈ. இளங்கோவடிகள்
(விடை : ஔவையார்)
7. கவிமணி என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் யார்?
அ. தேசிக விநாயகம் பிள்ளை ஆ. நாமக்கல் கவிஞர் இ. பாரதியார் ஈ. ந. பிச்சமூர்த்தி
(விடை : தேசிக விநாயகம் பிள்ளை)
8. மணநூல் என்று சிறப்பிக்கப் பெறும் நூல் எது?
அ. சிலப்பதிகாரம் ஆ. மணிமேகலை இ. அகநானூறு ஈ. சீவக சிந்தாமணி
(விடை : சீவக சிந்தாமணி)
9. மகாகவி எனக் குறிக்கப்படும் சான்றோர் யார்?
அ. பாரதிதாசன் ஆ. வாணிதாசன் இ. பாரதியார் ஈ. கண்ணதாசன்
(விடை : பாரதியார்)
10. கிறித்துவக் கம்பர் என்று புகழ் பெற்றவர் யார்?
அ. வீரமாமுனிவர் ஆ. ஜெயங்கொண்டார் இ. ஹெச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை ஈ. குணங்குடி மஸ்தான்
(விடை : ஹெச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை)