சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. அலகபாத் கல்வெட்டைத் தொகுத்தவர்
அ. அரிசேனர் ஆ. ரவிகீர்த்தி இ. விசாகத்தர் ஈ. தருமபாலர்
(விடை : அரிசேனர்)
2. திருரத்தினங்கள் (அ) மும்மணிகள் கருத்தை வெளியிட்டவர்
அ. மகா வீரர் ஆ. புத்தர் இ. ரிசபர் ஈ- பார்சுவநாதர்
(விடை : மகா வீரர்)
3. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மதத்தைச் சார்ந்தது?
அ. சமணம் ஆ. பௌத்தம் இ. இந்து சமயம் ஈ. சமயச் சார்பற்றது.
(விடை : பௌத்தம்)
4. புத்தர் தனது முதல் போதனையை தொடங்கிய இடம்
அ. கயா ஆ. லும்பினி இ. காஞ்சி ஈ. சாரநாத்
(விடை : சாரநாத்)
5. பௌத்த மக்களின் மறைநூலாகக் கூறப்படுவது
அ. ஜாதக கதைகள் ஆ. அங்கங்கள் இ. பூர்வங்கள் ஈ. திரிபீடகம்
(விடை : திரிபீடகம்)
6. மதப்பேரரசின் முதல் தலைநகரம்
அ. பாட்லிபுத்திரம் ஆ. இராஜகிருதம் இ. சிராவஸ்தி ஈ. கயா
(விடை : சிராவஸ்தி)
7. ஹர்சருக்கு உதவி செய்த காமரூப மன்னன்
அ. பாஸ்கரவர்மன் ஆ. காரவேலர் இ. அஜாதசத்ரு ஈ. வட்டகாமினி அபயன்
(விடை : பாஸ்கரவர்மன்)
8. சோம சுரா பானங்களை அருந்தியவர்கள்
அ. முற்பட்ட வேதகாலம் ஆ. பிற்பட்ட வேதகாலம் இ. திராவிடர்கள் ஈ. ஆரியர்கள்
(விடை : முற்பட்ட வேதகாலம்)
9. முற்பட்ட வேதகாலத்தில் சிறந்து விளங்கிய பெண் கவிஞர்கள்
அ. கார்கி ஆ. அபலா இ. மைத்ரேயி ஈ. ஔவையார்
(விடை : அபலா)
10. குமரி கண்டத்தில் ஓடிய ஆறு
அ. வைகை ஆ. பஃறுளியாறு இ. வைப்பாறு ஈ. தாமிரபரணி
(விடை : பஃறுளியாறு)