சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கை உருவச் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்
அ. மொகஞ்சதாரோ ஆ. லோத்தல் இ. ஹரப்பா ஈ. காளிபங்கன்
(விடை : மொகஞ்சதாரோ)
2. சிந்துசமவெளி மக்களின் எழுத்து முறை
அ. பிராமிய முறை ஆ. கரோஸ்தி இ. சித்திர வடிவ எழுத்து ஈ. நாகரிக வடிவம்
(விடை : சித்திர வடிவ எழுத்து)
3. ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?
அ. தென்னகம் ஆ. குமரிக்கண்டம் இ. லெமூரியா கண்டம் ஈ. சென்னை மாகாணம்
(விடை : சென்னை மாகாணம்)
4. ஆயுதங்கள் வீட்டுச் சாமான்கள் செய்ய சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய உலோகம்
அ. வெள்ளி ஆ. தங்கம் இ. எஃகு ஈ. செம்பு
(விடை : செம்பு)
5. ஆப்பிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் இணைக்கும் ஒரு நிலப்பகுதியாக இருந்தது
அ. லெமூரியா ஆ. குமரிக்கண்டம் இ. அண்டார்டிகா ஈ. இந்து மாக்கண்டம்
(விடை : லெமூரியா)
6. ஆரியர்களின் முக்கியத் தொழில்
அ. வேளாண்மை ஆ. நெசவுத் தொழில் இ. வாணிபம் ஈ. கால்நடை வளர்ப்பு
(விடை : கால்நடை வளர்ப்பு)
7. திருப்பதி மலைக்குத் தெற்கில் வாழும் மக்கள் பேசும் மொழி
அ. தெலுங்கு ஆ. தமிழ் இ. கன்னடம் ஈ. மலையாளம்
(விடை : தமிழ்)
8. காந்தாரக் கலைச் சிற்பங்கள் .............. சமயத்தைச் சார்ந்தவை
அ. புத்த ஆ. வைணவ இ. பௌத்த ஈ. சமண
(விடை : புத்த)
9. ராவி நதிக்கரையில் ஆங்கிலேயர் இருப்புப் பாதை அமைத்த ஆண்டு
அ. 1853 ஆ. 1855 இ. 1854 ஈ. 1856
(விடை : 1856)
10. மனித நாகரிக வளர்ச்சியின் முதல் படிநிலை
அ. பழைய கற்காலம் ஆ. புதிய கற்காலம் இ. செம்புக் கற்காலம் ஈ. இரும்பு கற்காலம்
(விடை : புதிய கற்காலம்)