பிளஸ் 2 தேர்வில் கல்லுரி சேரக்கைக்கான கலைகட்டும் பிஏ பிபிஏ கலை அறிவியல் படிப்புகள் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பிளஸ்டூ முடித்த மாணவர்கள் தங்கள் கல்லுரி சேர்க்கையில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பிற்க்கு கவுன்சிலிங் நீட் தேர்வு மற்றும் நீட் தேர்வு முடிவுகள் பொறியியல் படிப்புகளா , மருத்துவம் மற்றும் வேளாண்மை, கால்நடை மருத்துவ படிப்புகள் சிக்கலில் இருக்கையில் சத்தமில்லாமல் பிஏ, பிபிஏ, பிகாம், பிகாம் சிஏ மற்றும் இளங்கலை அறிவியல் படிப்புகளுக்கான பிஎஸ்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அத்தோடு சேர்க்கை அதிகரித்து காணப்படுகிறது.
கல்லுரி கல்வி இயக்குநர் பேராசிரியை ஜெ. மஞ்சுளா அவர்கள் கருத்துப்படி கடந்த பல ஆண்டுகளாக பொறியியல் மோகம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் தற்பொழுது பிகாம், பிபிஏ, பிஎஸ்சி இளங்கலை படிப்புகளான தாவரவியல், வேதியியல், உயிரியல் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பிஏ ஆங்கிலம் , பிஏ பொருளாதார பாடபிரிவுகளுக்கான சேர்க்கை பிகாம் பிரிவு பாடங்கள் சேர்க்கை அதிகரித்திருப்பது மாணவர்களிடையே இருக்கும் மாற்றம் உணர்த்துகின்றது.
குறிப்பிட்ட சில கல்லுரிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட அதிகமான சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அனுமதியுடன் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படுகின்றன .
வேலைவாய்ப்பு :
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அட்மின் என்ற பிகாம் பிரிவு மாணவர்கள் தேவை அதிகரித்து காணப்படுகிறது. அதே போன்றே வணிகம் மற்றும் லேப் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் பெருகிய வண்ணம் இருக்கின்றன . ஆதலால் இப்பட்ட படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
சார்ந்த தகவல்கள்:
பிளஸ் டூ மாணவர்களுக்கான மதிபெண் பட்டியல் நேரடியாக பள்ளியில் பெறலாம்
வேலைவாய்ப்பு பதிவெண் பெற மாணவர்கள் பள்ளியிலிருந்தே இணையத்தளத்தில் பெறலாம்