சென்னை : தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. மாணவ மாணவியர்கள் சமூக அறிவியல் பாடத்தில் அதிக அளவில் முழுமதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இந்த வருடம் ரேங்க் பட்டியல் கிடையாது. மாநில அளவில் மதிப்பெண் பட்டியலும் கிடையாது.
481க்கு மேல் 3.93% பேர்,
451 முதல் 480 வரை - 12.50% பேர்
426 முதல் 450 வரை - 11.59% பேர்
401 முதல் 425 வரை - 11.33% பேர்
301 முதல் 400 வரை - 37.36% பேர்
201 முதல் 300 வரை - 19.58% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
38,613 பேர் 481 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
451 முதல் 480க்குள் 1,22,757 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
426 முதல் 450க்குள் 1,13,831 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
401 முதல் 425க்குள் 1,11,266 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
301 முதல் 400க்குள் 3,66,948 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்
201 முதல் 300க்குள் 1,92,336 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
175 மற்றும் அதற்கும் குறைவாக 20,404 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.