அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பம் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம் தகுதியும் விருப்பமுடையோர் வாய்ப்பை பயன்படுத்துங்கள்
தமிழக அரசு தனது வேலைவாய்ப்பு அறிக்கையில் பாலிடெக்னிக் கல்லுரிகளின் விரிவுரையாளர் பணிக்காக அறிவிப்பு விடுத்தது அறிவோம் அனைவரும், இந்த அறிவிப்பை மீண்டும் நினைவுபடுத்துகிறோம் . 1058 காலிப்பணியிடங்கள் கொண்ட விரிவுரையாளர் பணி காலியாக உள்ளது . விரிவுரையாளர் சம்பளம் ரூபாய் 15000- 39100 கல்வி தர ஊதியம் ரூபாய் 5900 ஆகும் . விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .
ஆன்லைன் விண்ணபிக்க ஜூன் 17 முதல் தொடங்குகிறது மேலும் ஜூலை 7ஆம் தேதி 11.59 மணிபிற்பகல் வரை விண்ணப்பிக்கலாம் . ஆகஸ்ட் 13 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க தொடங்குங்கள்.
பொறியியல் பாட விரிவுரையாளர் பணிக்கு இளங்கலை பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடத்தில் விரிவுரையாளர் பணிக்கு பொறியியல் அல்லாத மற்ற பாடத்தில் முதுகலை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 ஆன்லைனில் செலுத்த வேண்டும் . மாற்றுதிறனாளிகள் ரூபாய் 300 மட்டும் செலுத்தினால் போதுமானது ஆகும் .
ஒய்வு பெறும் வயது 58 ஆகும் . விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தமிழக அரசின் ஆசிரியதேர்வு இணையத்தினை பயன்படுத்துங்கள்.