காவலர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி முதல் உடல் தகுதி தேர்வு 15 இடங்களில் நடைபெறும் என தமிழாடு சீருடை தேர்வுகுழு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணித்துறையில் 13137 காவலர் இரண்டாம் நிலை காவலர், 1015 இரண்டாம் நிலை சீருடை காவலர்கள் மற்றும் 1512 தீயணைப்பு காவல் துறையினர் பதவிக்கான எழுத்து தேர்வு மே 21 ஆம் நாள் நடைபெற்றது . அவர்களுக்கான எழுத்து தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
4.82 லட்சம் பேர் மட்டும் தேர்வு எழுதினர் 1. 5இலட்ம் பேர் பெண்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.
இந்த் மாதம் ஜூலை 27 ஆம் நாள் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 15 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது . உடல் தகுதி தேர்வு ஜூலை 27 ல் தொடங்குகிறது. சென்னை காஞ்சி,விழுப்புரம், வேலூர்,தர்மபுரி , சேலம் ,கோயம்புத்தூர், இராமநாதபுரம், திருநெல்வேலி,தூத்துக்குடி,ஆகிய 15 இடங்களில் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது .
உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு மற்றும் உடற் திறன் போட்டி நடைபெறுகிறது. காவல்துறை சரக டிஜிபி தலைமையில் நடைபெறுகிறது.
எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் www.tnusrbonline.org என்ற இணைய தளத்தில் பிறந்த தேதி ,சேர்க்கை எண் தெரிவித்து உடற் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை பெற்றுகொள்ளலாம் . இத்தகவலை சீரூடை பணியாளர் தேர்வு குழு அறிவித்தது . போலீஸ் ஆவது பலருடைய கனவுகளில் ஒன்றாகும் . இதன் பொருட்டு எழுத்து தேர்வில் பங்கேற்றவர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
சார்ந்த தகவல்:
போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு சீருடைப்பணி தேர்வுக்கான முதல்கட்ட முடிவகளுக்கு பின் நாளை இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள்