இராணுவத்தில் வேலையில் பணிபுரிய ஆவலா உங்களுக்கான வாய்ப்பு
இந்தியா இராணுவத்தில் பணிபுரிய திருச்சி இராணுவ அலுவலகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .
இந்திய இராணுவத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு இந்திய இராணுவத்தில் தொழில் நுட்ப வீரர், தொழில் நுட்ப பிரிவில் வேலை வாய்ப்பு இருக்கின்றது . (ஏவிஎன், ஏஎம்என் எக்ஸாமினர் ),செவலியர் உதவியாளர், பொது பிரிவு, கிளார்க்,சரக்கரை காவலர் (தொழில் நுட்பம் ) டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளில் ஆள்சேர்க்க முகாம் நடத்தப்படுகிறது .
தஞ்சாவூர் அன்னை சத்யா மாவட்ட மைதானத்தில் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 தேதி வரை இந்த முகாம் நடைபெறும் . அரியலுர், கரூர், கன்னியாகுமரி,இராம நாதபுரம் ,சிவகங்கை, புதுகோட்டை,பெரம்பலுர், தஞ்சை, திருவாரூர், விருதுநகர்,தூத்துக்குடி உள்ளிட்ட 14 மாவட்டங்களை சேர்ந்தோரும் புதுசேரி,காரைக்கால் சேர்ந்தோரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .இந்த முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளோர் JOIN INDIAN ARMY.NIC.IN பக்கத்தில் ஜூன் 17 முதல் ஜூலை ஜூலை 17 வரை விண்ணப்பிக்கலாம் . ஜூலை 17ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிக்க இயலாது
இந்தியஇராணுவம் தொடர்ந்து இந்தாண்டு பல பிரிவுகளில் வேலைக்கான அழைப்பு விடுத்துவருகிறது, ஒன் இந்தியாவில் பாருங்கள் ஆர்மி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்புகளை அறிவிப்பு வெளியிட்டுள்ளோம் . இராணுவத்தில் வேலை செய்ய விருப்பமுள்ளோர் உங்களது கல்வி தகுதி சான்றிதலுடன் விண்ணப்பிக்கலாம்