அரசு வாய்ப்புகள் :
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான பயிற்சி படிப்புகளை மத்திய அரசின் தொழிற் துறை அமைச்சகம் ஐடிஐ, ஐடிசி அமைப்பு தொழில் நுட்ப பயிற்சி வழங்குகின்றது . இதற்கு அடிப்படையாக எலக்ட்ரீசியன், மெசினிஸ்ட் , ஃபிட்டர், வெல்டர் போன்ற அடிப்படை தகுதிகள் இருந்தால் பயிற்சிகள் தருகின்றன. இதன் பயிற்சிகாலம் ஒராண்டு முதல் மூன்றாண்டு வரை இருக்கும். மேலும் நேரடியாக நிறுவனங்களில் பயிற்சியில் அமர்த்தி ஆல் இண்டியா டெஸ்ட் சான்றிதழ் வழங்குகின்றன. அத்துடன் மத்திய அரசு நிறுவனமான இரயில்வே மற்றும் தொலைதொடர்பு நிறுவனத்தில் ரிட்டன் டெஸ்ட் எனப்படும் எழுத்து தேர்வு வைத்து வேலைக்கு பணியமர்த்துகிறது .
மத்திய பணி நிறுவனமான ஸ்டாஃப் செலக்ஸன் கமிசனும் பத்தம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கிளாரிக்கல் தேர்வு வைத்து பணியமர்த்துகின்றன. மேலும் கற்பிக்க விருப்பமுள்ளவர்களுக்கு மூன்று வருடம் பயிற்சி வழங்கி பிரைமரி எனப்படும் ஆரம்பக்கல்வி ஆசிரியராகவும் பணியமர்த்துகின்றன .
தமிழ்நாடு அரசு விஏஒ தேர்வு எழுத பத்தாம் வகுப்பு தகுதியே வைத்துள்ளது. அஞ்சல் அலுவலகத்திலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகின்றன .
" போகும் பாதை வெகுதூரமில்லை தொடர்ந்து பயணிப்பதே வாழ்வின் கடமை ,,,, தொடர்வோம் பயணத்தை நல்ல தேடலுடன் "